தேசிய ஐவர் பூப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தேவராஜ் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.
சிறு விளையாட்டு அரங்கத்தில் தேசிய பூப்பந்தாட்ட போட்டி
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
- பலர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் 8-ம் ஆண்டு பூப்பந்து போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநில பூப்பந்தாட்ட துணைத் தலைவர் ம. அன்பழகன் தலைமையில் மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.கடந்த 3 தினங்களாக போட்டிகள் நடைபெற்று வந்தது.
கடந்த 3 தினங்களாக நடைபெற்ற பூப்பந்து போட்டியில் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில பூப்பந்தாட்ட துணைத் தலைவர் ம. அன்பழகன் தலைமை தாங்கினார். ஜே பி பி சி தலைவர் எஸ் மோகன்ராஜ் வரவேற்றார்.
திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான கா தேவராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய அளவிலான பூப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு சதன் ரயில்வே அணிக்கு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ஐ.சி.எப். அணிக்கு ரூ.40 ஆயிரம், 3-வது பரிசு எஸ்.ஆர்.எம். அணிக்கும் ரூ.30 ஆயிரமும், பெண்கள் பிரிவில் திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். பொறியியல் கல்லூரி மாணவிகள் முதல் பரிசு ரூ.25 ஆயிரம், சென்னை எல்.எஸ்.எஸ். அணி 2-ம் பரிசு ரூ.20 ஆயிரம், சேலம் தேவாரம் பைவ் ஸ்டார் அணி 3-ம் பரிசு ரூ.15 ஆயிரமும், 4-ம் பரிசு ரூ.10 ஆயிரம் பரிசுகளையும், கோப்பைகளையும் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நல துணைத் தலைவர் சா. ராஜேந்திரன், நகர மன்ற தலைவர் எம். காவியா விக்டர், துணைத் தலைவர் பெ. இந்திரா பெரியார்தாசன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் விளையாட்டு வீரர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.