உள்ளூர் செய்திகள்
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டரம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்றம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புதுப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த வாலிபரை மடக்கிப்பிடித்து விசாரணைசெய்தனர்.
அதில் அவர் திருப்பத்தூரை அடுத்த லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன்(வயது 42)லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 55 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.