உள்ளூர் செய்திகள்

பள்ளி, மருத்துவமனை அருகே உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும்

Published On 2022-12-19 09:50 GMT   |   Update On 2022-12-19 09:50 GMT
  • பொதுமக்கள் புகார்
  • பலமுறை போராட்டம் நடத்தியும் நடவடிக்கை இல்லை என புகார்

வாணியம்பாடி:

வாணியம்பாடி அருகே பள்ளி மருத்துவமனை அருகே உள்ள மதுபான கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கலெக்டர் மற்றும் முதல்வருக்கு புகார் அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம் அடுத்த மிட்டூர் பகுதியில் மதுபான கடை உள்ளது.

இந்த கடையின் வழியாக தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வேலைக்கு செல்வதுடன் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களும் பெண்களும் நடந்து செல்கின்றனர்.

அப்போது அந்த வழியாக வரும்போது சாலை ஓரமே உள்ள இந்த மதுபான கடையினால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்படுகிறது.

இந்த கடையின் ஒட்டிய பகுதியிலேயே அனுமதி இன்றி பார் நடைபெற்று வருகிறது. எனவே இந்த மதுபான கடையை உடனடியாக வேரு இடத்திற்கு மாற்ற வேண்டும் ஏன்னா பொதுமக்கள் தரப்பில் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தியும் இதுநாள் வரையில் மாற்றப்படாமல் உள்ளது.

அதேபோல் அனுமதியின்றி நடைபெறும் பார் யை மூட தேவையான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு பொதுமக்கள் தரப்பில் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

Similar News