உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

Published On 2023-06-02 15:40 IST   |   Update On 2023-06-02 15:40:00 IST
  • 15 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி பேர்லீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்-இன்ஸ் பெக்டர்கள் நந்தகுமார், சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கொத்தூர் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவரின் மகன் பாபு (வயது 38) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News