உள்ளூர் செய்திகள்
- குடிபோதையில் விபரீதம்
- 2 பேர் கைது
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் பன்னீர்செல்வம் நகர் 3- வது தார்வழி பகுதியை சேர்ந்த குமார் வயது (42) கூலி தொழிலாளி நேற்று மாலை அப்பகுதியில் ஒரு முதியவர் இறந்தார்.
சாவு ஊர்வலத்தில் ஆடல் பாடலுடன் குடிபோதையில் பலர் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது வாய் தகராறு ஏற்பட்டு குமாரை அதே பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகள் கனகராஜ் மகன் சுனில் குமார் (வயது 26) அவருடைய தம்பி அணில் குமார் (22) இருவரும் சேர்ந்து தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த குமார் ஆம்பூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இவரின் புகாரின் பேரில் அண்ணன் தம்பிகள் 2 பேரை கைது ஆம்பூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.