உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி ஊர்க்காவல் படை வீரர் சாவு

Published On 2022-12-17 09:15 GMT   |   Update On 2022-12-17 09:15 GMT
  • ஹீட்டர் மூலம் தண்ணீரை சுடவைத்த போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி தாலுகா கேத் தாண்டப் பட்டியை அடுத்த கூத்தாண் டகுப்பம் பகுதியை சேர்ந்தவர். ஆஞ்சிநேயன் (வயது 32). இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஊர்க்காவல் படையில் சேர்ந்தார். தற்போது ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஊர் காவல் படை போலீசாராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு திருமணம் ஆகி சீதா என்ற மனைவியும், ரேணுகாந்தன், ரவிவர்மன், நித்திஷ் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் குளிப்பதற்காக ஆஞ்சிநேயன் தனது வீட்டில் பிளாஸ்டிக் குடத்தில் ஹீட்டர் மூலம் தண்ணீரை சுடவைத்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தி னம் மற்றும் போலீசார் சம் பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்த னர்.

மேலும் இது குறித்து அவ ரது மனைவி சீதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News