உள்ளூர் செய்திகள்

கார் மீது அரசு பஸ் மோதி 6 பேர் படுகாயம்

Published On 2023-09-21 15:57 IST   |   Update On 2023-09-21 15:57:00 IST
  • அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
  • பஸ்சையும், காரையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்

ஆம்பூர்:

திருப்பதி செல்வதற்காக தருமபுரியில் இருந்து காரில் சக்தி, கிருபாகரன், மோகன், அறிவழகன் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். காரை மனோஜ் குமார் என்பவர் ஓட்டினார். தர்மபுரியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி அரசு பஸ் காரின் பின்னால் வந்து கொண்டிருந்தது.

வேலூர் - ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கார் டிரைவர், பஸ் டிரைவர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பஸ்சையும், காரையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விபத்து சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News