உள்ளூர் செய்திகள்

இலவச கண் சிகிச்சை முகாம்

Published On 2023-06-27 08:53 GMT   |   Update On 2023-06-27 08:53 GMT
  • டிரைவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வாணியம்பாடி:

வாணியம்பாடி வட்டார போக்குவரத்து கழகம், வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் டாக்டர் பையாஸ் கமால் மருத்துவமனை ஆகியோர் இணைந்து ஓட்டுனர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் ஆர்.வி.குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.வி.பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். மோடார் வாகன ஆய்வாளர் வெங்கட் ராகவன் அனைவரையும் வரவேற்றார்.

வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் கண் மருத்துவர் பரஹான் சவூத் கலந்து கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி பஸ், ஆட்டோ டிரைவர்கள் ஆகியோருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டார்.

மேலும் கண்பார்வை குறைபாடு உள்ள டிரைவர்களுக்கு இலவசமாக கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

இதில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி, இஸ்லாமிய கல்லூரி தமிழ் துறை தலைவர் ப.சிவராஜி, என். வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சங்க பொருளாளர் ஏ.அருண்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News