உள்ளூர் செய்திகள்

புதிய உறுப்பினர் சேர்க்கையை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்

Published On 2023-04-16 14:20 IST   |   Update On 2023-04-16 14:20:00 IST
  • திருப்பத்தூர் நகர அதிமுக சார்பில் வழங்கப்பட்டது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் நகர அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ஹோட்டல் ஹீல்ஸில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுக நகர செயலாளர் டி டி. குமார் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் டாக்டர் லீலா சுப்ரமணியம், துணைச் செயலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன் முன்னிலை வகித்தார், அனைவரையும் வார்டு செயலாளர் பட்டாசு குமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர் படிவம் வழங்கி முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளர் கே. சி. வீரமணி பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கே. ஜி. ரமேஷ், தொகுதி செயலாளர் கே.எம்.சுப்பிரமணியம், தம்பாகிருஷ்ணன், கந்திலி ஆர்.ஆறுமுகம், மாவட்ட தகவல் தொழில்நுட்பச் செயலாளர் ஆர்.நாகேந்திரன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ரா.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி டி..எம்.ரவி, சந்திரமோகன், அழகிரி; மதன், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இறுதியில் அவைத் தலைவர் ஜி.ரங்கநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News