உள்ளூர் செய்திகள்

விபத்தில் விவசாயி படுகாயம்

Published On 2022-12-12 10:03 GMT   |   Update On 2022-12-12 10:03 GMT
  • லாரி மீது பைக் மோதியது
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி புள்ளான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சென்றாயன் (வயது 54) விவசாயி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சென்றாயன் தனது பைக்கில் பொன்னேரி ஏலகிரி மலை கூட்டுரோட்டில் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சாலை உள்ள தடுப்பு மீது மோதி எதிரே வாணியம்பாடி இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற லாரி மீது மோதியதில் பலத்த படுகாயம் அடைந்தார். இதனால் அப்பகுதி பொது மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்து சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து லாரி டிரைவர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News