உள்ளூர் செய்திகள்
வாணியம்பாடி வட்ட கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி வட்ட வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் அதன் தலைவர் (பொறுப்பு) அ. ஜோதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் வேலூர் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் இருந்து அங்கு தயாரிக்கப்படும் அச்சு பொருட்கள் நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வாணியம்பாடி வட்டத்தின் சார்பில் விற்பனைகளை மேற்கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர்கள் சாரதி, அன்பழகன், ராஜா, சற்குணம், அருள், வாசுகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.