உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு

Published On 2022-11-12 07:56 GMT   |   Update On 2022-11-12 07:56 GMT
  • மனைவிக்கு வளைகாப்பு நடந்த நிைலயில் பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா இவரது மகன் முருகன் என்கிற முருகேசன் (வயது 32). இவர் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் இயங்கி வரும் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2 வருடமாக ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு நந்தினி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்ேபாது நந்தினி 6 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். நந்தினிக்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் தமிழக முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே அகர்பத்தி நிறுவனத்தில் திடீரென மின்சாரம் பழுது ஏற்பட்டது.

இதனால் பழுதை சரி செய்ய அப்பகுதியில் பணிபுரியும் லைன் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் மின் பழுது சரி செய்ய என்கிற முருகேசன் அகர்பத்தி நிறுவனம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி சரி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென முருகன் மீது மின்சாரம் பாய்ந்தது.

உடல் கருகி டிரான்ஸ்பார்மர் மீது பரிதாபமாக உயிரிழந்தார்

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப் இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News