உள்ளூர் செய்திகள்

கார் மோதி டிரைவர் பலி

Published On 2023-10-04 08:36 GMT   |   Update On 2023-10-04 08:36 GMT
  • விபத்து நடந்த இடத்தில் காரின் நம்பர் பிளேட் இருந்தது
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஈரோடு மாவட்டம், சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 40). டிரைவர். இவர் ஈரோட்டில் இருந்து வேலைக்காக ரெயில் மூலம் ஜோலார்பேட்டைக்கு வந்தார்.

பக்கிரி தக்கா சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் நடந்து சென்று கொண்டிருந்த ஞானசேகரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஞானசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஞானசேகரன் உயிரிழந்த இடத்தில் விபத்து ஏற்படுத்திய காரின் நம்பர் பிளேட் இருந்துள்ளது.

இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News