உள்ளூர் செய்திகள்
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
- படிக்கட்டில் பயணம் செய்ததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஒரிசா மாநிலம் ரூர்கேலா ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநில பெங்களூர் வரை செல்லும் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வாணியம்பாடி கேத்தாண்ட ப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது.
அப்போது படிக்கட்டில் பயணம் செய்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென தவறி விழுந்து அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புஷ்பா வழக்கு பதிவு செய்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.