உள்ளூர் செய்திகள்

விபத்தில் 2 பேர் சாவு

Published On 2022-11-20 14:28 IST   |   Update On 2022-11-20 14:28:00 IST
  • பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு உசேன் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 20). வாணியம்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று இரவு உமராபாத் அருகே உள்ள அயித்தம்பட்டு கூட்ரோட்டில் உதயகுமார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மூர்த்தி என்பவர் ஓட்டி வந்த பைக்கும். உதயகுமார் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதி கொண்டது.

இதில் சம்பவ இடத்திலேயே உதயகுமார் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மூர்த்தியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி இறந்தார்.

இது குறித்து உமராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உதயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 ேபர் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News