உள்ளூர் செய்திகள்

மாநில தடகளப் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் பதிவு செய்ய அழைப்பு

Published On 2022-08-11 09:35 GMT   |   Update On 2022-08-11 09:35 GMT
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 14 -ந் தேதி நடக்கிறது
  • 4 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன

ஜோலார்பேட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 14 -ந் தேதி நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் இணைவழி மூலம் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க செயலாளர் கே.எஸ். சிவப்பிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கை தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வருகிற 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கங்களில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இப்போட்டிகள் 14,16, 18 மற்றும் 20 வயதுடையோர் என 4 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன இதில் பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரர்கள் tnathleticassociation.com என்ற இணைய தளம் மூலமாக தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் மேலும் இப்போட்டி மூலம் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை செப்டம்பர் 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் 33வது தென் மண்டல ஜூனியர் தட கள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கலாம்.

மேலும் விவரம் அறிய திருப்பத்தூர் மாவட்டம் வீரர் வீராங்கனைகள் திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க செயலாளர் கே.எஸ்.சிவபிரகாசம் 9944308354 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Tags:    

Similar News