உள்ளூர் செய்திகள்

பாலாற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் தீ வைத்து எரிப்பு

Published On 2023-04-16 08:49 GMT   |   Update On 2023-04-16 08:49 GMT
  • தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் ஊராட்சி பாலாற்றில் ரசாயன கழிவு பிளாஸ்டிக் கேன்களை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முகழுதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

தீ விபத்தை பார்த்த பொதுமக்கள் ஆம்பூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News