உள்ளூர் செய்திகள்

அண்ணனை கொலை செய்த தம்பி கைது

Published On 2023-08-09 10:12 GMT   |   Update On 2023-08-09 10:12 GMT
  • மது குடித்து விட்டு தகராறு
  • போலீசார் விசாரணை

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் ஆரிப் நகரை சேர்ந்தவர் அஸ்ரத் (22), இவரது தம்பி ரியாஸ் (21). 2 பேரும் கதவுகளுக்கு பாலீஸ் போடும் தொழில் செய்து வந்தனர். அஸ்ரத் நேற்று இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டார்.

மேலும் அஸ்ரத், அவரது தாய் மற்றும் தம்பிரியாசை கட்டையால் தாக்கினார்.

இதில் ஆத்திரமடைந்த ரியாஸ் அண்ணன் அஸ்ரத்தை கட்டையால் சரமாரியாக தாக்கி, வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டார். பின்னர் இன்று காலை அவரது தாய், அறையின் கதவை திறந்து பார்த்தபோது, அஸ்ரத் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரியாசை கைது செய்தனர்.

Tags:    

Similar News