உள்ளூர் செய்திகள்

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

Published On 2022-12-10 14:26 IST   |   Update On 2022-12-10 14:26:00 IST
  • காரில் வந்து மர்ம கும்பல் கைவரிசை
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் டிவி துரைசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன் இவரது மகன் மோகன் (வயது 50) இவர் விவசாயம் செய்து வருகிறார்.

இவர் நேற்று காலை தனது விவசாயத்தில் விளைந்த மிளகாய் பறித்து அருகில் உள்ள சோமநாயக்கன்பட்டி ரெயில்வே கேட் அருகே விற்பதற்காக தனது வீட்டின் கதவை பூட்டி கொண்டு சென்று வியாபாரம் செய்து வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சயடைந்தனர்.

அறையில் உள்ள 2 பீரோவை உடைத்து அதில் இருந்த 4 ½ சவரன் தங்க நெக்லஸ் மற்றும் ½ சவரன் தங்க கம்மல் திருடு போனது தெரியவந்தது.

இதனையெடுத்து மோகன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் மர்ம ஆசாமிகள் யாரோ காரில் வந்தவர்கள் சாலையோரம் காரை நிறுத்தி விட்டு அருகில் இருந்த வீட்டின் கதவை பூட்டை உடைத்து நகை திருடி சென்றுயுள்ளது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News