உள்ளூர் செய்திகள்

வாணியம்பாடி தொகுதியில் ரூ.3.25 கோடியில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகள்

Published On 2023-02-01 10:12 GMT   |   Update On 2023-02-01 10:12 GMT
  • செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு
  • பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்

வாணியம்பாடி:

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை செந்தில்குமார் எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நேற்று மரிமாணிகுப்பம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் கூறினார்.

தொடர்ந்து மிட்டூர் ஊராட்சி பகுதியில் ஆலங்காயம் - திருப்பத்தூர் சாலையில் ஜல்தி அருகே ரூ.1.25 கோடியில் கட்டப்படும் பாலப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ஆலங்காயம் அடுத்த தீர்த்தம் பகுதியில் ரூ.1.25 கோடி செலவில் கட்டப்படும் பாலம் பணிகளையும் சென்று ஆய்வு செய்தார், பணிகளின் தரம் குறித்தும் அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டு அறிந்தார். இந்த ஆய்வின் போது முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கோபால், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பாரதிதாசன், செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News