உள்ளூர் செய்திகள்
100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 10 பேரை தேனீக்கள் கொட்டியது
- திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- தென்னை மரத்திலிருந்து ஓலை தேன்கூட்டில் விழுந்தது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி தாலுக்கா பச்சூர் பழைய பேட்டை பொதிகை வட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் காலையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது தென்னை மரத்திலிருந்து ஓலை வேப்ப மரத்தின் மீது விழுந்தது. வேப்ப மரத்தில் கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்களின் கூடு கலைந்ததால் பணியில் ஈடுபட்டிருந்த 10-க்கும் மேற்பட்டவர்களை தேனீக்கள் பூச்சிகள் கொட்டியது.
இதில் படுகாயம் அடைந்த பழைய பேட்டை பகுதியைச் சார்ந்த புண்ணியம்மாள் (வயது 60), சாலி (45), அருள்மொழி (45), வள்ளியம்மாள் (51) திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீதம் உள்ள 6 பேர் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.