உள்ளூர் செய்திகள்
வெயிலில் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு
- ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் சின்ன மோட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் புகழேந்தி தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக பணியாளர்களுக்கு கோடை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பொன்னேரி ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி அருள், ஒன்றியகுழு கவுன்சிலர் சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அரவிந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கே.கோபி, குமரேசன், சந்தோஷ், ஊராட்சி செயலாளர் சின்னதம்பி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மக்கள்நல பணியாளர் என பலர் கலந்து கொண்டனர்.