உள்ளூர் செய்திகள்

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நண்பர் மீது தாக்குதல்

Published On 2023-05-23 13:43 IST   |   Update On 2023-05-23 13:43:00 IST
  • முதியவர் கைது
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த பெரியமோட்டூர் குட்டை புள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் பூனை யாழரசன். இவரது மனைவி பிரதீபா (வயது 31). இவர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதில் எனது கணவர் யாழரசனுக்கு சொந்தமான மொபட்டை அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் திருப்பதியுடன் (56) சேர்ந்து அடமானம் வைத்து மது குடிப்ப தற்கு செலவு செய்து உள்ளனர்.

மீதமுள்ள பணத்தை எனது கணவரின் நண்பர் திருப்பதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அதை எனது கணவர் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக் குள் தகராறு ஏற்பட்டு, யாழரசனை திருப்பதி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இது சம்பந்தமாக சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.

Tags:    

Similar News