உள்ளூர் செய்திகள்
ரூ.13.50 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்
- பூமிபூஜை போட்டு தொடங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஒன்றியம், பொன்னேரி ஊராட்சி ராமனூர் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்க ரூ. 13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டும் கட்டிடம் பணியை க.தேவராஜி எம்.எல்.ஏ. பூமிபூஜை போட்டு நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், மாவட்ட கவுன்சிலர்கள் சிந்துஜா ஜெகன், கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி அருள், துணைத் தலைவர் அரவிந்தன், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் சி எஸ் பெரியார்தாசன், ஊராட்சி செயலாளர் சின்னத்தம்பி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.