உள்ளூர் செய்திகள் (District)

ஆலங்காயத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-17 09:19 GMT   |   Update On 2022-12-17 09:19 GMT
  • விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொணடனர்

ஆலங்காயம்:

ஆலங்காயத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம் மற்றும் ஆலங்காயம் பேரூராட்சி அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான கோவி. சம்பத்குமார், பேரூராட்சி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கே.சி. வீரமணி, வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடக்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஆர். மகேந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாண்டியன், வாணியம்பாடி நகர செயலாளர் சதாசிவம், உட்பட பலர் கலந்து கொணடனர்.

Tags:    

Similar News