உள்ளூர் செய்திகள்

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

Published On 2023-04-29 07:40 GMT   |   Update On 2023-04-29 07:40 GMT
  • கணவர் கைது
  • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

ஆம்பூர்:

ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் நூர் அகமது (வயது 38). இவரது மனைவி பாபிதா பேகம் (35). கணவன், மனைவி இருவரும் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

கடந்த 22 -ந் தேதி கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாபிதா பேகம் வீட்டில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

இதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக பாபிதா பேகம் இறந்தார்.

பாபிதா பேகம் சாவுக்கு, நூர் அகமதுதான் காரணம். அவரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் புகார் அளித்தனர். உடலை வாங்க மறுத்தனர்.

இது சம்பந்தமாக ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நூர் அகமதுவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News