உள்ளூர் செய்திகள்

கடைகளில் திருட முயன்ற வாலிபர் கைது

Published On 2022-12-20 10:01 GMT   |   Update On 2022-12-20 10:01 GMT
  • பூட்டை உடைத்து துணிகரம்
  • போலீசார் விசாரணை

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. டிஜிட்டல் பேனர் மற்றும் ஸ்டூடியோ, காயில் கட்டும் கடை உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று முன்தினம் இரவு 2 மணி அளவில் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்தது.

அங்கு இருந்து ஆட்டோ டிரைவர்கள் சத்தம் கேட்டு சந் தேகத்திற்குரிய வகையில் சுற்றி இருந்த நபரை பிடித்து ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசார ணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார்.

இதனால் போலீசார் திருப்பத்தூர் டவுன் காவல் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப் போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் டோல்கேட் தர்காநகர் பகுதியைச் சேர்ந்த பர்கத் (வயது 20) என்பதும், கடைகளில் திருட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பர்கத்தை கைது செய்தனர்.

Tags:    

Similar News