உள்ளூர் செய்திகள்
வீட்டில் குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த வாலிபர் கைது
- செல்போன் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று முன்தினம் தனது வீட்டில் குளித் துக் கொண்டிருந்தார். அப்போது ஆம்பூர் அடுத்த பச்சகுப் பம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பெண் வீட்டுக்கு வந்தார்.
அவர் தனது செல்போனில் அந்தப் பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. அதைப் பார்த்த அப்பெண் அதிர்ச்சி அடைந்து, அவரை கண்டித்தார். வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் பெண் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து 'விசாரணை நடத்தி வருகின்றனர்.