உள்ளூர் செய்திகள்

மலை கிராமத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2023-05-12 12:41 IST   |   Update On 2023-05-12 12:41:00 IST
  • ரோந்து பணியில் சிக்கினார்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் டி.எஸ்.பி சரவணன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று மாலை நாயக்கனேரி ஊராட்சி பணங்காட்டேரி மலை கிராமத்தில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளியான சேட் வயது (45) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.

பின்னர் அவரிடம் இருந்த 15 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் சேட் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News