உள்ளூர் செய்திகள்

5 ஆட்டோக்கள் பறிமுதல்

Published On 2023-03-30 09:20 GMT   |   Update On 2023-03-30 09:20 GMT
  • அதிக அளவு பயனிகளை ஏற்றி சென்றதால் நடவடிக்கை
  • போக்குவரத்து போலீசார் வாகன சோதனை

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், சாலை பாதுகாப்பு கூட்டத்தில் அதிக மாணவ மாணவிகளையும், பொது மக்களையும் ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோடு, ஹவுசிங் போர்டு, வாணியம் பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிக அளவு மாணவ, மாணவிகளையும், பொது மக்களையும் ஏற்றி வந்த 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல உரிய ஆவணங்கள் இன்றி வந்த 7 ஆட்டோக்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எம். கே.காளியப்பன் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News