உள்ளூர் செய்திகள்

பைக் மோதி 4 சிறுவர்கள் படுகாயம்

Published On 2023-08-20 08:01 GMT   |   Update On 2023-08-20 08:01 GMT
  • பின்னால் வந்த பைக் மோதியது
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை ஜெய மாதா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சக்தி வேல் (வயது 15). அதேப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது உறவினர் மகள் யோகேஸ் வரி (15). இவர்களது நண்பர்கள் நிசாந்த் (14), அஸ்வினி (14).

இவர்கள் நான்கு பேரும் சம்பவத்தன்று பார்சம்பேட்டை கடைத்தெரு வழியாக சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தனர். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் நடந்து சென்று கொண்டிருந்த 4 பேர் மீதும் மோதி படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அங்கிருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக திருப் பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News