உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2023-05-31 09:36 GMT   |   Update On 2023-05-31 09:36 GMT
  • 90 பாக்கெட் பறிமுதல்
  • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கேத்தாண்டப்பட்டி அருகே கள்ளச்சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பெயரில் நாட்டறம்பள்ளி போலிசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது கேத்தாண்டப்பட்டி அருகே கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த பரத் (வயது 23). வல்லரசு (19) ஆகிய இருவரும் தங்களது வீட்டின் பின்புறம் தலா 45 பாக்கெட் கள்ளச்சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை மடக்கி பிடித்தனர்.

திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் அவர்களிடமமிருந்து 90 கள்ள சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

Tags:    

Similar News