உள்ளூர் செய்திகள்

ரெயிலில் அடிப்பட்டு 2 பேர் பலி

Published On 2022-08-08 15:09 IST   |   Update On 2022-08-08 15:09:00 IST
  • தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே கேத்தாண்டப்பட்டி வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கிடையே சுமார் 45 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அவ்வழியாக சென்ற ஒரு ரெயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோ லார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் உடையவர் சாம்பல் கலர் பேண்ட், சாம்பல் கலர் சர்ட் அணிந்து உள்ளார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதே போல விண்ணமங்கலம் வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 45 வயது தக்கவர் தண்டவாளத்தை கடக்கும் போது அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் மாநிறம் உடையவர் வெள்ளை கலரில் லுங்கி அணிந்துள்ளார் இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News