உள்ளூர் செய்திகள்

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு 'குவா குவா'

Published On 2023-05-14 07:56 GMT   |   Update On 2023-05-14 07:56 GMT
  • அழகான ஆண் குழந்தை பிறந்தது
  • மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் மங்கை. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அதன்பேரில் ஆம்புலன்ஸ் அங்கு வந்து, மங்கையை ஏற்றிக்கொண்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு சென்றது.

ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் ராஜேஷ், ஓட்டுநர் சக்திவேல் ஆகியோர் இருந்தனர். ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி வனப்பகுதியில் செல்லும் போது மங்கைக்கு பிரசவ வலி அதிகரித்ததால், மருத்துவ உதவியாளர் ராஜேஷ் பிரசவம் பார்த்தார். இதில் மங்கைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் தாயும், குழந்தையும் ஆம்பூர் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News