உள்ளூர் செய்திகள்

மாற்று கட்சியினர் 100 பேர் ஓ.பி.எஸ். அணியில் இணைந்தனர்

Published On 2023-09-23 09:04 GMT   |   Update On 2023-09-23 09:04 GMT
  • ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சென்னம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஓ.பி.எஸ். தரப்பு நகர செயலாளர் கோபி சங்கர் தலைமையில் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஓ.பி.எஸ். தரப்பு மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு கலந்துகொண்டனர். இதில் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகி 100 பேர் ஓ.பி.எஸ். அணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதில் நகர அவை தலைவர் சாஜாத் உசேன், சிறுபான்மை நகர செயலாளர் ஆதில் அஹமத், சிறுபான்மை அவைத் தலைவர் அத்தாவுல்லா, சிறுபான்மை துணை செயலாளர் நாசிர் அஹமத், மாவட்ட பிரதிநிதி சலீம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News