உள்ளூர் செய்திகள்

முத்தீஸ்வரர் கோவிலில் திருப்பணி நடைபெறுகிறது.

முக்தீஸ்வரர் கோவிலில் திருப்பணி தொடக்கம்

Published On 2022-10-12 09:48 GMT   |   Update On 2022-10-12 09:48 GMT
  • இக்கோயில் நீண்ட நாட்களாக சிதலமாகி இருந்த நிலையில் உள்ளூர் மக்களும், பக்கத்து கிராமவாசிகளும், பக்தர்களும் ஒருங்கிணைந்து திருப்பணிகளை மேற்கொண்டனர்.
  • விரைவில் இக்கோவிலுக்கான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக திருப்பணி குழுவினர் தெரிவித்தனர்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோடுகிழி கிராமத்தில் வெட்டாற்றின் வடகரையில் பழமையான முக்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நீண்ட நாட்களாக சிதலமாகி இருந்த நிலையில் உள்ளூர் மக்களும், பக்கத்து கிராமவாசிகளும், பக்தர்களும் ஒருங்கிணைந்து திருப்பணிகளை மேற்கொ ண்டனர்.

கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திரு கூட்டத்தின் நிறுவனர் திருவடி சுவாமிகள் கோவிலு க்கு வந்து தரிசித்து திருமுறை பாராயணம் செய்து கோயில் திருப்பணியை துவக்கி வைத்தார்.

சுவாமிக்கு சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.அது சமயம் திருப்பணி குழுவினர், திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர். விரைவில் இக்கோவிலுக்கான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக திருப்பணி குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News