உள்ளூர் செய்திகள்

விழாவில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

திண்டுக்கல்லில் திருமலை திருக்குடைகள் ஊர்வலம்

Published On 2023-09-23 13:34 IST   |   Update On 2023-09-23 13:34:00 IST
  • திண்டுக்கல் நாகல்நகர் பால் விநாயகர் கோவிலில் திருக்குடைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
  • தொடர்ந்து 2 திருக்குடைகளும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அஷ்டலட்சுமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் ராஜலட்சுமி நகர் அஷ்டலட்சுமி கோவில் சார்பில் திருப்பதி திருமலையில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் சுவாமி வீதி உலாவின் போது வாகன சேவையில் பயன்படுத்துவதற்கு 2 திருக்குடைகள் வழங்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு திண்டுக்கல் நாகல்நகர் பால் விநாயகர் கோவிலில் திருக்குடைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 2 திருக்குடைகளும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அஷ்டலட்சுமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்றனர். இன்று திருமலைக்கு திருக்குடைகளை கோவில் நிர்வாகிகள் கொண்டு செல்கின்றனர்.

இந்த திருக்குடை ஊர்வலத்தில் அஷ்டலட்சுமி கோவில் தலைவர் ராமையா, செயலாளர் தில்லை நடராஜன், பொருளாளர் மாரிமுத்து, துணை தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பாரதி முருகன், டாக்டர் அமிர்தகடேஸ்வரர், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமிர்தா கல்லூரி நிர்வாகிகள் காளியம்மாள், சரண்யா, சக்திவேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News