உள்ளூர் செய்திகள்
பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதுரகாளியம்மன் கோவிலில் தீமிதி விழா
- பக்தர்கள் கரகம் மற்றும் அழகு காவடி எடுத்து வீதியுலா.
- பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் கோயிலை வந்தடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை திருவிழந்தூர் அண்ணா நகரில் பழமை வாய்ந்த சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் உள்ளது.
இந்த கோவிலில் 64-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் மயிலாடுதுறை காவிரிக் கரையில் இருந்து கரகம் மற்றும் அழகு காவடி எடுத்து வீதியுலாவாக, பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் கோயிலை வந்தடைந்தனர்.
கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்தனர்.
இதில் விழா குழுவினர், தெருவாசிகள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.