- விழாவிற்கு திராவிடர் கழக தலைமை கழக அமைப் பாளர் ஊமை. ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அறி வரசன் வரவேற்றார்.
- நிகழ்ச்சி யில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பெரியார் மய்யத்தை திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி,
பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணகிரியில் பெரியார் மய்யம் திறப்பு விழா, தந்தை பெரியார் சிலை திறப்பு விழா, அண்ணல் அம்பேத்கர் நூலகம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா கிருஷ்ண கிரி கார்னேசன் திடலில் நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு திராவிடர் கழக தலைமை கழக அமைப் பாளர் ஊமை. ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அறி வரசன் வரவேற்றார். நிகழ்ச்சி யில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பெரியார் மய்யத்தை திறந்து வைத்தார்.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பெரியார் சிலையை திறந்து வைத்தார். உணவு துறை அமைச்சர் சக்கரபாணி அம்பேத்கர் நூலகத்தை திறந்து வைத்தார். கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, கி.வீரமணி படிப்பகத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் டி.மதியழகன் எம்.எல்.ஏ. (கிருஷ்ணகிரி கிழக்கு), ஒய்.பிரகாஷ் (கிருஷ்ணகிரி மேற்கு), திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலா ளர் அன்புராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் என்.எஸ்.பிரபாவதி, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மாணிக்கம், மாநில ஒருங்கி ணைப்பாளர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் எம்.பி. சுகவனம், நகராட்சி தலைவர் பரிதா நவாப், நகர செயலாளர் நவாப், தி.மு.க. பிரமுகர் தொழில் அதிபர் கே.வி.எஸ். சீனிவாசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினேஷ், துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட விவசாயி அணி துணை அமைப்பாளர் ஜி.கே.உதயகுமார், மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.