உள்ளூர் செய்திகள்

மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்வதை படத்தில் காணலாம்.


தோரணமலை முருகன் கோவில் பவுர்ணமி கிரிவலம் -திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2022-09-12 09:35 GMT   |   Update On 2022-09-12 09:35 GMT
  • தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளதுதோரண மலை முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது .
  • யானை வடிவில் அமைந்துள்ள மலைமீது முருகன் கோவில் அமைந்துள்ளது ஒரு சிறப்பாகும். மேலும் மலைமீது அமைந்துள்ள குகையில் அமைந்துள்ள முருகன் கோவிலாக இது சிறப்புற்று விளங்குகிறது.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளதுதோரண மலை முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது .

யானை வடிவில் அமைந்துள்ள மலைமீது முருகன் கோவில் அமைந்துள்ளது ஒரு சிறப்பாகும். மேலும் மலைமீது அமைந்துள்ள குகையில் அமைந்துள்ள முருகன் கோவிலாக இது சிறப்புற்று விளங்குகிறது.

இந்த முருகன் கோவில் அமைந்துள்ள மலையை சுற்றிலும் பக்தர்கள் பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது வழக்கமாக உள்ளது.

ஆவணி மாத பவுர்ணமி அன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையைச் சுற்றிலும் முருகனின் பக்தி பாடல்களை படித்த வாறும், முருகனின் சரண கோசங்களை எழுப்பிய வாறும் பக்தி பரவசத்தோடு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சுற்றளவுள்ள தோரணமலையை கிரிவலம் வந்தனர்.

கிரிவலம் வந்த பக்தர்கள் அனைவருக்கும் மலையடிவாரத்தில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

Tags:    

Similar News