உள்ளூர் செய்திகள்

குன்றுப்பாறை மாதேசிலிங்கம் கோவிலில் திருவிளக்கு பூஜை

Published On 2022-12-31 06:30 GMT   |   Update On 2022-12-31 06:30 GMT
  • காலை 9மணிக்கு கணபதி ஹோமம்,ருத்ரஹோமம்,ருத்ரஜபம் நடைபெற்றது.
  • மாலை 6 மணிக்கு 108 சுமங்கலிப்பெண்கள் நடத்திய திருவிளக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் குன்றுப்பாறை-மாதேசிலிங்கம் கோவில் உள்ளது.இந்த கோவிலில் 28-ஆம் ஆண்டு ஸ்ரீ அய்யப்பன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக குன்றுப்பாறை மாதேசிலிங்கம் கோவிலில் நேற்று காலை 9மணிக்கு கணபதி ஹோமம்,ருத்ரஹோமம்,ருத்ரஜபம் நடைபெற்றது.

பின்னர் காலை 10 மணிக்கு ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ அய்யப்பன்,ஸ்ரீ மாதேசிலிங்க சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு மாதேசிலிங்க சுவாமிக்கு அலங்கார பூஜை நடைபெற்றது . மாலை 6 மணிக்கு 108 சுமங்கலிப்பெண்கள் நடத்திய திருவிளக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags:    

Similar News