உள்ளூர் செய்திகள்

போன் நேரு பள்ளியில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

திருவெண்ணைநல்லூர் போன் நேரு பள்ளியில் உலக யோகா தினம்

Published On 2022-06-23 09:46 GMT   |   Update On 2022-06-23 09:46 GMT
  • திருவெண்ணைநல்லூர் போன் நேரு பள்ளியில் உலக யோகா தினம் நடைபெற்றது.
  • யோகா பயிற்சியாளர் ஆதிநாராயணன் மாணவ-மாணவிகளிடம் யோகா பயிற்சி செய்து காண்பித்தார்.

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் போன்நேரு மேல்நிலைப் பள்ளி மற்றும் விழுப்புரம் கோ சேவா சார்பில் பள்ளிவளாகத்தில் உலக யோகா தினம் நடைபெற்றது .பள்ளி தாளாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மகாலட்சுமி குரூப்ஸ் தொழிலதிபர் தருண், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு யோகாவின் அவசியம் முக்கியத்துவம் பற்றி விளக்கமாக கூறினார். யோகா பயிற்சியாளர் ஆதிநாராயணன் மாணவ-மாணவிகளிடம் யோகா பயிற்சி செய்து காண்பித்தார். இதில் பள்ளி முதல்வர் விஜயலட்சுமி வாசுதேவன் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News