உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தாளாளர் கண்ணன் பாராட்டிய காட்சி.


திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

Published On 2022-06-26 08:23 GMT   |   Update On 2022-06-26 08:23 GMT
  • 236 மாணவ- மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
  • சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வரும், தாளாளருமான அழகன் என்ற கண்ணன் பாராட்டினர்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 236 மாணவ- மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

மேலும் 228 மாணவ-மாணவிகள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். மாணவி மீனலோசினி 600-க்கு 584 மதிப்பெண்களையும், வர்ஷா 577 மதிப்பெண்களையும், மாணவி ஜோதி காருண்யா, மாணவர் மது காண்டீபன் ஆகியோர் 573 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர்.

கணிதத்தில் 2 பேரும், இயற்பியலில் 2 பேரும், வேதியியலில் 3 பேரும், உயிரியலில் 2 பேரும், கணிப்பொறி அறிவியலில் ஒருவரும் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.

தேர்ச்சி மற்றும் சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வரும், தாளாளருமான அழகன் என்ற கண்ணன் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News