உள்ளூர் செய்திகள்
திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி
- 236 மாணவ- மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
- சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வரும், தாளாளருமான அழகன் என்ற கண்ணன் பாராட்டினர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 236 மாணவ- மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
மேலும் 228 மாணவ-மாணவிகள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். மாணவி மீனலோசினி 600-க்கு 584 மதிப்பெண்களையும், வர்ஷா 577 மதிப்பெண்களையும், மாணவி ஜோதி காருண்யா, மாணவர் மது காண்டீபன் ஆகியோர் 573 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர்.
கணிதத்தில் 2 பேரும், இயற்பியலில் 2 பேரும், வேதியியலில் 3 பேரும், உயிரியலில் 2 பேரும், கணிப்பொறி அறிவியலில் ஒருவரும் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
தேர்ச்சி மற்றும் சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வரும், தாளாளருமான அழகன் என்ற கண்ணன் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.