உள்ளூர் செய்திகள்

பல நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவன் கோயிலில் திருவாசகம் நிகழ்ச்சி

Published On 2022-06-26 08:44 GMT   |   Update On 2022-06-26 08:44 GMT
  • கிருஷ்ணகிரியில் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் வழிபாடு நடந்தது.
  • பக்தர்கள் திருவாசகம் பாடினர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியான சூளகிரி-பேரிகை சாலையில்வாணியர் தெருவில் பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது.

ஆண்டு தோறும் கார்த்திகை பூஜை செய்து பொது மக்களிடம் காணிக்கைகள் வாங்கி நடைபயணமாக சென்று சூளகிரியில் உள்ள பெரியமலை மீது கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவர்.பின்னர் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இன்று திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது. திரளான சிவபக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

Similar News