உள்ளூர் செய்திகள்
ஜவ்வாதுமலை அரசு பள்ளியில் யோகா தினம்
- தலைமை ஆசிரியர் நன்மைகள் குறித்து விளக்கிக் கூறினார்
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
போளூர்:
ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட துரிஞ்சுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் யோக தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யோகா செய்து காட்டினர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மன்னர் சாமி யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் உடல் ஆரோக்கியம், மன அமைதி, உற்சாகம் கொடுத்தல், மனதை ஒருமுகப்படுத்துதல் போன்ற நன்மைகள் ஏற்படும் என்று விளக்கிக் கூறினார்.
இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் பார்வையிட்டார். இதில் உதவி ஆசிரியர்கள் அருள் வைத்தியநாதன் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.