உள்ளூர் செய்திகள்

பைக் மீது பஸ் மோதி தொழிலாளி சாவு

Published On 2023-08-16 09:18 GMT   |   Update On 2023-08-16 09:18 GMT
  • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
  • போலீசார் விசாரணை

கண்ணமங்கலம்:

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த பால்வார்த்து வென்றான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 37), தொழிலாளி.

இவர் தனது பைக்கில் சந்தவாசலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்றார்.

அப்போது கல்வாசல் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சந்தவாசல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News