உள்ளூர் செய்திகள்

குட்கா விற்ற கடைக்கு சீல்

Published On 2023-09-01 07:18 GMT   |   Update On 2023-09-01 07:18 GMT
  • ரூ.2 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
  • போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை:

வாலாஜா நகரில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு பங்க் கடையில் சோதனை நடத்தினர்.

சோதனையில் கடையில் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது அதை தொடர்ந்து போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் சேட்டு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, கடைக்கு சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News