உள்ளூர் செய்திகள்

கால்வாயில் ஆண் பிணம் மீட்பு

Published On 2023-06-28 09:15 GMT   |   Update On 2023-06-28 09:15 GMT
  • யார் என அடையாளம் தெரியவில்லை
  • போலீசார் விசாரணை

செய்யாறு:

செய்யாறு பைபாஸ் சாலையில் பாலம் ஒன்று அமைந்துள்ளது. இதன் அடியில் கால்வாய் செல்கிறது. இந்த நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் கால்வாயில் விழுந்து இறந்த நிலையில் கிடந்தது.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து செய்யாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கால்வாயில் கிடந்த உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News