உள்ளூர் செய்திகள்

தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு தட்டு, டம்ளர் வழங்கிய போது எடுத்த படம்.

தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு தட்டு, டம்ளர்

Published On 2023-11-03 13:52 IST   |   Update On 2023-11-03 13:52:00 IST
  • முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம்
  • ஏராளானோர் கலந்து கொண்டனர்

கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் முதல் - அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் கீழ் பயன்பெறும் மாணவ-மாணவிகளுக்கு சில்வர் தட்டு, டம்ளர் வழங்கும் விழா கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூடத்தில் நடந்தது.

கீழ்பென்னாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாக்கியலட்சு மிலோகநாதன், அண்ணாமலை, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) கவிதா அனைவரையும் வரவேற்றார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எவ.வேலு மற்றும் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோரின் ஆலோசனைப்படி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் கலந்துகொண்டு, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதல் - அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 86 தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரத்து 198-மாணவ- மாணவிகள் பயன்படுத்தும் வகையில் சில்வர் தட்டு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை மையப்பொறுப்பாளர்களிடம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல்கப்பார் (நிர்வாகம்), வடிவேல் (வேலை உறுதி திட்டம்), ஒருங்கிணைந்த வட்டார மகளிர் திட்ட இயக்க மேலாளர் சுகந்தி, ஒன்றியஅலுவலக பணியாளர்கள் சேகர், நிர்மல், ஒருங்கிணைப்பாளர் முனியம்மாள் மற்றும் மையப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News