உள்ளூர் செய்திகள்

100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-24 13:22 IST   |   Update On 2023-06-24 13:22:00 IST
  • 2 கிலோ மீட்டருக்குள் வேலை வழங்க வலியுறுத்தல்
  • அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்

போளூர்:

போளூர் ஒன்றியம், திண்டிவனம் ஊராட்சி யில், மாற்றுத்திறனாளி களுக்கு 100 நாள் வேலை முறையாக வழங்கக் கோரி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் நலச்சங்கம் மாவட்ட செயலாளர் ந.சிவாஜி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அ.சு. லட்சுமி மற்றும் அலுவ லர்கள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி னர்.

அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா அண்ணாதுரை, துணை கவிதா பிரகாசம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

இந்த ஊராட்சியில் மட்டும் 425 மாற்றுத்திறனாளி உள்ளனர்.

அவர்களுக்கு தொடர்ச்சியாக 2 கிலோ மீட்டருக்குள் வேலை வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு பிடிஓ, உண் மையான எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்து சுழற்சி முறையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Similar News